பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா இன்று கொழும்பு ஆனந்த கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரசிரி கஜதீரவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் குறித்த நிகழ்வுகள் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இன்று இடம்பெற்றன.