முன்னாள் பிரதமர் உற்பட பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன் சமூகமளிக்குமாறு அழைப்பு

p077lmyf
p077lmyf

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திவி நெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்கவால் குறித்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவிற்கும், சட்டத்தரணி வெலிஅமுனவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அனைவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.