குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
மக்களின் வீடுகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் வருகை தரும் பட்சத்தில்
அவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விபரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .