40 இற்கு அதிகமான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

tttttt
tttttt

கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவர் கண்டி-கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதோடு 40 இற்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பக்கட் மற்றும் பொதி செய்ய வைத்திருந்த கேரளா கஞ்சாவையும் மீட்டுள்ளனர் .

கேரளா கஞ்சா பக்கட் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .