மக்களின் கோரிக்கை நிறைவேறியது

kkkkkik
kkkkkik

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

இதனடிப்படையில் தற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர் .

மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சென்று மக்களுடன் கலந்துரையாடி இதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக தெரிவித்ததால் பின்னரே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது .

இதற்கமைய தான் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியதையடுத்து, குறித்த நியமனத்தை ஒரு கிழமைக்குள் பெற்றுக்கொடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .