நாம் எதிர்க்காலத்தில் முழு அரசியலமைப்பையே மாற்றியமைக்கத்தான் நடவடிக்கை எடுத்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு வாக்களித்த, சுயநினைவுள்ள அனைத்து மக்களுக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள ஆபத்து நன்றாகத் தெரிந்திருக்கும்.
மேலும், 69 இலட்சம் பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். இவர்கள், ஜனநாயகத்தை இவ்வாறு இல்லாது செய்யவா வாக்களித்தார்கள் என்று அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன் என மனுஸ நாணயக்கார கூறியுள்ளார்.