விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

unnamed file 1
unnamed file 1

யாழ் – தெல்லிப்பளை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து தெல்லிப்பளை உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் விபத்தில் சிக்கியுள்ளார். இதே வேளை தலைக்கவசம் கழன்று வீழ்ந்தமையால் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

மேலும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த பிரதீபன் சதீனா என்ற 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது