ஈஸ்டர் தாக்குதலின் 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

IMG 0534
IMG 0534

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

குறித்த வழக்கு இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதே வேளை காணொளி ஊடாக சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு சந்தேக நபர்கள் விசாரணைக்காக மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் மேற்குறித்த 12 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .