வீட்டுத்திட்ட பயனாளிகளுடன்‌ காதர் மஸ்தான் கலந்துரையாடல்

20200907214238 IMG 0728
20200907214238 IMG 0728
20200907215511 IMG 0731
20200907215511 IMG 0731

.

வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்ட பயனாளிகளினையும்,  இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படாத பயனாளிகளையும்  பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அதனை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு  விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படாதவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயனாளிகளுக்கு உறுதியளித்தார். 

20200907213837 IMG 0720
20200907213837 IMG 0720


இவ் கலந்துரையாடலில்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வீடுகள் அற்ற  பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

20200907213837 IMG 0720 1
20200907213837 IMG 0720 1