இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் வருமான வரி 14 வீதத்தையும் தங்கம் மீதான 15 வீத இறக்குமதி வரியையும், நீக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை சம்பந்தப்பட்ட குறித்த வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மாணிக்க உற்பத்தி மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது