மன்னாரில் மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கைது

45

மன்னாரில் மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வாகன மொன்றில் கடத்தி செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மன்னார் சாந்திபுரன் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கு இடமான குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் உப்பு பக்கட்டுக்களுக்கு மத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1379 கிலோ 960 கிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபரொருவரும் கைது செய்யப்ப்பட்டுள்ளார். இவர் மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஆவார். மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.