மட்டு மாவட்டத்தில் இனி நுண்கடன்கள் முன்னெடுப்பதற்கு அரசாங்க அதிபர் தடை

DSC 0031
DSC 0031

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (08) கன்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமிழ்லாய்வு கூட்டம் இன்று (08) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது இதன்பொது அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

DSC 0024
DSC 0024

மாவட்டத்தில் 35 அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முன்னேற்ற மீளாய்வினை முன்வைத்தனர். இதில் மொத்தத்தில் 124 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்தினுள் கல்வி சுகாதார விவசாய வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பு. மீன்பிடி போன்ற துறைகளை உள்ளடங்கியுள்ளது

DSC 0022 1
DSC 0022 1

மாவட்டத்தில் இயங்கிவருகின்ற அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் மக்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக அவர்களாக முன்வந்து மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கிமைக்கு அனைத்து அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் .

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுண் கடன்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திரம் மாவட்டத்தில் முன்னெடுக்க முடியு மேதவிர புதிய கடன்கள் வழங்கப்படக்கூடாது என்றும் இதனை பிரதேச செயலாளர்கள் கண்கானித்து அறிக்கையிடப்படல் வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.

DSC 0031
DSC 0031

இவ் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷ;சி ஸ்ரீகாந் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு தக்களின் கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

DSC 0022
DSC 0022