விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை; 62 சந்தேக நபர்கள் கைது

cvgjhjisnhbildsh
cvgjhjisnhbildsh

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் போது 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது சந்தேகத்தின் பேரில் 62 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் போதைப்பொருள், கசிப்பினை தம்வசம் வைத்திருந்தவர்கள் மற்றும் வீதி விதி முறைகளை மீறியவர்கள் என்றதன் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 180 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReplyForward