பொலிஸாரினால் போதைப்பொருளை பயன்படுத்திய 547 பேர் கைது!

3317b2940a002299975e48c3da332f4f 1
3317b2940a002299975e48c3da332f4f 1

மேல் மாகாணத்தில் பொது இடங்களில் போதைப்பொருளை பயன்படுத்திய 547 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மத்தியில் ஆக கூடுதலானோர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இவர்களின் எண்ணிக்கை 265 ஆகும். இவர்களிடம் இருந்து 89 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.