பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது

2 696x364 1
2 696x364 1

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபர் கந்தளாய், கிண்ணியா மற்றும் அக்போபுர, முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளில் பல வணிக நிலையங்களை உடைத்து திருடிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த சந்தேக நபர் நாளை கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .