மாடறுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக சிலோன்தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ நாட்டில் மாடுகள் வெட்டுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றினை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில் சிலோன்தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது .
இது தொடர்பில் அந்தஅமைப்பு சார்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த ஊடகசந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு மனிதனும் தான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அவனே தீர்மானிக்க வேண்டும். அது அவனது உரிமையும் கூட ஆகவே அதனை தடுக்க அரசாங்கம் நினைக்க கூடாது. அவ்வாறு அரசாங்கம் மாடறுப்பிணை தடை செய்யயுமாக இருந்தால் அதனை எதிர்த்து நாம் நிச்சயமாக நீதிமன்றம் செல்வோம் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது .