ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரதான ஐந்து பிரசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இன்று காலை கொழும்பு புதியநகர மண்டபத்தில் இடம்பெறும் இடதுசாரி ஆதரவுக் கூட்டமொன்றிலும், நண்பகல் கத்தோலிக்க ஆயர்களுடன் விசேட சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, கொழும்பிலுள்ள மாநாடு ஒன்றிலும் கலந்துகொண்டதன் பின்னர் பிற்பகல் 3.00 மணிக்கு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.