களுத்துறையில் நாளை நீர் வெட்டு

water cut 0
water cut 0

களுத்துறை பிரதேசத்தில் சில பிரதேசங்களில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன சபை தெரிவித்துள்ளது.

இன்று (09) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாத்துவை, வஸ்கடுவ, பொதுபிடிய, மொல்லிகொட, மொரொன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு மற்றும நாகொடை ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.