மக்களின் தாக்குதலிற்கு இலக்கான பொலிஸார்; பண்டாரகமவில் பதற்றம்

66666666666
66666666666

பண்டாரகம, அளுத்கம பகுதியில் பிரதேச வாசிகளின் தாக்குதலிற்கு உள்ளாகி நான்கு பொலிஸ் அதிகாரிகள் படு காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

அளுத்கம மாராவ பிரதேத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் வாகனத்தை வழிமறித்த பிரதேச மக்கள் காவல்துறையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியது நான்கு அதிகாரிகள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் உண்டான பதற்றமான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அண்டியுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .