யாழில் பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டம்

Gotabaya Rajapaksa 5
Gotabaya Rajapaksa 5

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று(Oct.28) யாழ்ப்பணத்தில் பெரும் எடுப்பில் நடாத்தப்படவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய, முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஸ ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.

மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி நின்று பிரசாரநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முன்னாள்பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவின் யாழ்ப்பான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துகாணமல் போனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.