தபால் மூல வாக்காளர் அட்டைகள் கையளிப்பு

postel vote 1 1
postel vote 1 1

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கையை இன்று பூர்த்தி செய்ய முடியும் என்று தபால் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்னும் 12 ஆயிரம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் மாத்திரமே விநியோகிக்கப்பட இருப்பதாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ம் திகதி, நவம்பர் மாதம் 1ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.