வவுனியா சாம்பல்தோட்டம் பிள்ளையார் கோவிலுக்கருகாமையில் இன்று இரவு 9 மணியளவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து செக்கடிப்புலவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரிகரன், மதுசன், சர்மிலன் ஆகிய மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் பாரிய சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் துண்டங்களாக உடைந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.