வவுனியாவில் மண் கடத்தல் முறியடிப்பு!

IMG 20200909 WA0011
IMG 20200909 WA0011

மாங்குளம் – பனிக்கன்குளம் கனகராயன் ஆற்றுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் கடத்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நேற்று இரவு(09) உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன், மாங்குளம் பொலிஸார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே மணல் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சில காலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஆற்றில் இருந்து மணல் அகழ்ந்ததாகவும், சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 19, 31, 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மாங்குளத்தில் வசிப்பவர்கள் என்றும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.