இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த சவேந்திர சில்வா !

e waste 2 720x450 1
e waste 2 720x450 1

கொரோனா தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டதால்,நாட்டில் நோய்த்தொற்றானது சமூகபரவலடையாது பாதுகாக்க முடிந்தது. என இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சவால்கள் மிகுந்தகொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினர் அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .