போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

lllllllll 1
lllllllll 1

மாவத்தகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1000 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

மேலும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே குறித்த போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கதுருவெல பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது