வாக்களிக்கும் கால எல்லையில் மாற்றமில்லை

mahinda desappiriya 4
mahinda desappiriya 4

எதிர்வரும் ஜனாதிபதித் தர்தலில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையின் காரணமாக மக்களின் வாக்களிப்பு நேரத்தினை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்களிப்பு நேரம் அதிகரிக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு மற்றும் அதிக வாக்காளர்களையும் கொண்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கும் நிலையில், தெரிவு செய்யும் வேட்பாளரின் சின்னத்தைத் அடையாளம் காண்பதில் வாக்காளருக்கு நேரமெடுக்கலாமென கருதப்படுவதால், கூடுதலாக வாக்காளர்களைக் கொண்ட வாக்களிப்பு நிலையங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு மாத்திரமே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பது சிரமங்களைத் தவிர்க்க உதவும். தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதால் முற்பகலில் வாக்களிப்பது சிறப்பானது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி நேரம்வரை மக்கள் காலம் தாழ்த்தாமல் நேரத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்