பௌத்த துறவியாக வேடம் போட்டு ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் கைது!

202006031504568144 Tamil News Meensurutty near alcohol sales arrest SECVPF 3
202006031504568144 Tamil News Meensurutty near alcohol sales arrest SECVPF 3

சாதாரண மனிதனாகவும், அவ்வப்போது பௌத்த துறவியாகவும் வேடம் போட்டு ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட வாரியபொல பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் தஹானேக்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் அவர் அவ்வப்போது துறவி அங்கி அணிந்து கொண்டு வீட்டிற்கு வந்து பின்னர் சாதாரண மனிதராக வெளியே வருவார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டு உரிமையாளரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போதைக்கு அடிமையானதாகக் காட்டிக் கொண்டிருந்த குறித்த சந்தேகநபரின் வசம் எட்டு கிராம் ஹெரோயின் இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.