மாணவர்களுக்கு ஷிஷா எனப்படும் புகைத்தலுக்கு அனுமதித்த உணவகத்தின் உரிமையாளர் கைது!

202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF
202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF

கொழும்பில் பிரபல பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 10 மாணவர்களுக்கு ஷிஷா எனப்படும் புகைத்தலுக்கு அனுமதித்த சம்பவம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸாரின் சுற்றிவலைப்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், உணவகமும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

குறித்த வளாகத்தில் மூன்று உணவகங்களை வைத்திருக்கும் உணவக உரிமையாளர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், ஷிஷா புகைத்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோட்டை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.