வடக்கிற்கான புகையிரத சேவையில் ஏற்படபோகும் மாற்றம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

15
15

கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்ப்டிருந்நதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களிலும் வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.