வறுமையை ஒழிக்க பாரிய வேலைத் திட்டம்- சஜித்

Sajith 9
Sajith 9

வறுமை நிலைமையை முற்றாக ஒழிப்பதற்காக பாரிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் வறுமையை ஒழிக்க நிரந்தர தீர்வாக சமுர்த்தி கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஜனசவி நிவாரண கொடுப்பனவையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிலாபம் நகரில் நேற்று (Oct.27) இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தன்னால் உருவாக்கப்படும் அரசாங்கம் பரிசுத்தமானதும், களவு, கொள்ளையற்றதுமான அரசாங்கமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.