யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை, குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், சட்டநடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
கடந்த வாரமும் விசேட அதிரடிப்படையினரால், ஹேரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.