தீ பற்றி எரிந்தது பாரவூர்தி!

lorry 2
lorry 2

நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் இன்று(11) அதிகாலை வீடு ஒன்றின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த பாரவூர்தியை, இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் பாரவூர்தியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு வாகனத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். மேலும், தீயினால் குறித்த நபரின் பாரவூர்தி முழுமையாக சேதமாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.