வீதியை வழிமறித்து செம்மணியில் ஆர்ப்பாட்டம்

111 1
111 1

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், ஏ.9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் .

இதனால் சுமார் 20 நிமிடம் ஏ9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது .

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தனியார் நிறுவனமொன்றே இதனுடன் தொடர்புபட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

இந்த தகவலையடுத்து, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

நல்லுர் பிரதேசசபை உறுப்பினர்கள் பார்வையிடுவதை அறிந்ததும், மருத்துவ கழிவை கொட்டிய தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் அங்கு வந்து, கழிவுகளை அகற்ற முயன்றனர். எனினும், அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த செயலை கண்டித்து, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் . சுமார் 20 நிமிடங்கள் வீதி மறிக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிசார், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தும்இந்த வீதியில் இடம்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் வீதி மறியலை கைவிட்டு, வீதியோரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .