மக்களுக்காக அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை தொண்டமானையே சாரும் – டக்ளஸ்

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 3

மக்களுக்கா அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை, அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘

1994ஆம் ஆண்டு, யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த போது, அமரர் ஆறுமுகம் தொண்டமானும் நாடாளுமன்றுக்கு வந்திருந்தார்.

அன்றுமுதல், இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில், கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து, மலையக மக்களுக்கு மாத்திரமின்றி, இந்த நாட்டு மக்களுக்கு அளப்பறிய சேவைகளை ஆற்றியுள்ளார் என மேலும் தெரிவித்துள்ளார்.