பங்களாதேஷில் மசூதியொன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அந்த நாட்டு அரசு எரிவாயு நிறுவனத்துக்கு, டாக்கா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நிறுவனம் பதித்திருந்த எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மசூதியிலுள்ள குளிரூட்டு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 29பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.