விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 11 கைது

1111111
1111111

மட்டக்களப்பு ஏறாவுர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரி ஒருவர் உட்பட நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏறாவூர் பொலிஸாரினார் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பின்னர் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லாது தலைமறைவாகி வந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறு கைது செய்த 11 பேரையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .