மட்டக்களப்பு, ஏறாவுர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரி ஒருவர் உட்பட நீதிமன்ற பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 11 பேரை நேற்று 10 இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரலக்குளம் பகுதியில் இருந்து கசிப்பை வயல் பகுதியால் எடுத்துக் கொண்டு வந்த கசிப்பு வியாபாரியை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஏறாவூர் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று இரவு முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பின்னர் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லாது தலைமறைவாகி வந்த 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்த 11 பேரையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.