இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3162 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3160 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 02 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2969 ஆக காணப்படுகின்றது.