அம்பாறை – பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் மாலை குறித்த வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.