பூஸா சிறையில் 37 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

tamil news pa 2
tamil news pa 2

காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள 37 கைதிகள் நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசேட பிரிவு கைதிகளான வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மாற்றும் பாதாள உலகக் குழு குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல கைதிகளே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கான தொலைபேசி பாவனை தடை செய்யப்பட்டமை, தமது சிறைக்கூடங்களில் நடத்தப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரான் நேற்று மாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.
……..