காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!

weather
weather

மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிய கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.