இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய போலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் போலிஸார் குறித்த பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பொலிஸார் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்