இந்தியத் தூதுவருடன் சுரேன் ராகவன் பேச்சு!

suren 1
suren 1

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கேவை இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.