வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களுடன் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (14.09) மாலை 3.30மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா மக்கள் எதிர் நோக்கும் விடயங்கள் வவுனியா மாவட்டங்களில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
வவுனியா மாவட்டத்தில் எடுக்கவேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை அவசர அழைப்பின்போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை, பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் தடுக்கப்பட வேண்டும், அதிகரித்த போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இதன் போது எடுத்துக்கூறப்பட்டது.