விபத்தில் பொலிஸ் சார்ஜண்ட் சாவு; கான்ஸ்டபிள் படுகாயம்!

unnamed 1 3
unnamed 1 3

நிட்டம்புவ  பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு – கண்டி  வீதியில் ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

கண்டி நோக்கிச் சென்ற குறித்த மோட்டார் சைக்கிள், அதனைச் செலுத்தியவரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஜீப் வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் படுகாயமடைந்த நிலையில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்..

பஸ்யால பிரதேசத்தைச் சேர்ந்தவரும் பேலியகொடை மாவட்ட போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றியவருமான 48 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.