சடலத்தை இனங்கான பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்!

2 5
2 5

வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிசார் கோரியுள்ளனர் .

கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர் . எனினும் அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை . இவரது அடையாளம் இன்று வரையிலும் காணமுடியவில்லை இறந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார் .

1 13
1 13

தடித்த மீசையுடன் காணப்படும் குறித்த நபரை இனங்கான பொதுமக்கள் 0243242448. 0718592115 ஆகிய இலக்கத்திற்கு பறயனாளங்குளம் பொலிசாருக்கு தகவல் தருமாறு தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர் .