அரச கதிரியக்கவியலாளர்கள் இன்று ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கத்தின் தலைமை செயலாளர் தர்மகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.