விமான நிலையத்தை மீண்டும் திறக்க சான்றிதழ் வழங்குங்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர்

l 1
l 1

சுகாதார பிரிவினரால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கும் வரையில் விமான நிலையம் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் நாட்டினுள் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடல் மார்க்கமாக இலங்கைக்கு பிரவேசிக்க முற்படும் இந்தியர்கள் தொடர்பில் தீவிரமாக அவதானிக்கப்படுவதாகவும், நாட்டினுள் கொரோனா தொற்று மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .