அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குழு ஒன்று நியமனம்!

PAVI
PAVI

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயவே 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவில் அங்கம் வகிக்கும் 5 பேரின் விபரங்கள்…

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்தா பெரேரா
ராகம மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிரசந்த விஜேசிங்க
வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர
வைத்திய நிபுணர் மைத்ரி சந்திரரத்ன
வைத்திய நிபுணர் தர்ஷன சிறிசேன