20ன் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியுமாம் நம்புகிறார் அங்கஜன்!

Angajan Ramanathan
Angajan Ramanathan

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம்.உண்டு என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் .

19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் காலத்தின் தேவையாகும். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாஷைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் அதே சமயம் உத்தேச அரசியமைப்பு யாப்பு மூலமாக தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.